மகனை வெட்டிய தந்தை சரண்

கோபால்பட்டி, செப். 25:  பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தந்தை அரிவாளால் மகனை வெட்டிய சம்பவம் சாணார்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாணார்பட்டி அருகே கருப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் சாமிராஜ் (60). இவரது மகன் சத்தியமூர்த்தி (40). கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். சாமிராஜ் அவ்வப்போது மகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று காலையில் சாணார்பட்டி பஸ்ஸ்டாப் அருகே எதிரே சத்தியமூர்த்தி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாமிராஜ் வழக்கம்போல பணம் கேட்டுள்ளார். ஆனால் சத்தியமூர்த்தி பணம் தர மறுத்து விட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆத்திரமடைந்த சாமிராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் சத்தியமூர்த்தியின் கை, காலில் வெட்டியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாணார்பட்டி காவல்நிலையத்தில் சாமிராஜ் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: