மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்

வத்தலக்குண்டு, செப். 25:  வத்தலக்குண்டு அருகே விராலிபட்டியை சேர்ந்தவர் செல்வம் (50). இவர் அப்பகுதியில் உள்ள ஓடையில் டிராக்டரில் மணல் அள்ளி  சென்று கொண்டிருந்தார்.  தகவலறிந்ததும் நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், துணை தாசில்தார் நந்தகோபால், கிராம நிர்வாக அதிகாரி நாகராஜன் விரைந்து வந்து சோதனையிட்டனர். அப்போது உரிய அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, செல்வத்தை வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர்.

Related Stories: