லாட்டரி விற்றவர் கைது

திருப்பூர், செப்.25: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி பின்புறம் வி.பி.சிந்தன் நகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்ெகட் தொழிலாளர்ளுக்கு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மறறும் 2,250 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: