×

திருப்பூரில் இன்று மின்தடை

திருப்பூர், செப்.25: திருப்பூர் குமார் நகர் துணை மின்நிலையத்தில் இன்று (25-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ராமமூர்த்திநகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, பாளையக்காடு, கருமாரம்பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், நேதாஜி நகர், ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சிநகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட்நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர், டி.எஸ்.ஆர்.லே-அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூர்ஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி சாலை, அருள்ஜோதிபுரம். நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்நிலையம், லட்சுமிநகர் ஆகிய பகுதிகளிலும் திருப்பூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட காட்டன் மில் ரோடு, டிடிபி ஒரு மில்லின் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதூர், பாப்பா நகர், குமாரசாமி நகர், சின்னபொம்மம்பாளையம், ஆர்.கே.நகர், ஓடக்காடு, வளையங்காடு, முருங்கப்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கோர்ட் வீதி, குமரன் ரோடு, வாலிபாளையம் மெயின் ரோடு, சபாபதிபுரம் ஆகிய பகுதிகளிலும் இன்று (25ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை திருப்பூர் மின்பகிர்மான கழக செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு