திருப்பூர், செப்.25: திருப்பூர், ரூரல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தாராபுரம் ரோடு கோவில் வழியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக ஒருவர் மது விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் மது விற்பனை செய்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் பெரியகிழவேர்த்தி பகுதியை சேர்ந்த குணசேகரன் (36) என தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் அவரிடம் இருந்த 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.