ஓட்டலில் மது அருந்த அனுமதித்தவர் கைது

திருப்பூர், செப்.25: திருப்பூர், ஊத்துக்குளி அருகே உள்ள கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு, வரும் வாடிக்கையாளர்களை மது அருந்த அனுமதி அளிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஊத்துக்குளி போலீசார் அந்த ஓட்டலில் சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு வாடிக்கையாளர்களை மதுகுடிக்க அனுமதிப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குபதிவு செய்து திருப்பூர் மண்ணரை கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்த அயல்ராஜ்(40) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: