×

கோவையில் வாலிபர் எரித்து கொலை போலீசார் விசாரணை

கோவை, செப்.25:  கோவை பீளமேடு விமான நிலையம் அருகேயுள்ள ரயில் பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சடலத்தில் 50 சதவீதம் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது. சடலம் கிடந்த இடத்தின் அருகே முட்புதர்களும் எரிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலம் ரயில் பாதையில் இருந்து 10 அடி தூரம் தள்ளி கிடப்பதால் தங்களது விசாரணை எல்லைக்குள் வராது, எனக்கூறி சென்று விட்டனர்.
இதை தொடர்ந்து பீளமேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை கொலை செய்து, சடலத்தை தூக்கி சென்று தீ வைத்து எரித்திருக்கலாம், சந்தேகம் வராமல் இருக்க சடலத்தின் மீது புதர் செடிகளை போட்டு தீ வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
 இதுகுறித்து போலீசார் கூறுகையில், இவர் 7 நாட்களுக்கு முன்பு  இறந்திருக்கலாம், ஆள் நடமாட்டம் இல்லாததால் சடலம் குறித்து எந்த தகவலும்  கிடைக்கவில்லை  பீளமேட்டில் வட மாநிலத்ைத சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இறந்த நபரின் அடையாளத்தில் காணாமல் போனதாக இதுவரை புகார்கள் வரவில்லை. யாரும் தேடி வராத நிலையில், அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின் கொலையா, தற்கொலையா என தெரியவரும், என்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்