மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

உடுமலை, செப். 25:  உடுமலை அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நாய்கடி உள்ளிட்ட 40 வகையான மருந்துகள் பற்றாக்குறையை கண்டித்து திருப்பூர் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (சிஐடியு.,) சார்பில் உடுமலை ஜி.ஹெச்., முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  பஞ்சாலை சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், சிஐடியு., மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ், ரமேஷ், சுப்பிரமணியம், பஞ்சலிங்கம், சுதா சுப்பிரமணியம், வசந்தி, ரத்தினசாமி, ராஜித்அலி, வசந்தாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: