×

பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை, செப்.25:  கோவை வாளையார் அருகேயுள்ள மாசித்திகவுண்டன் பதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (40). கூலி தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தபோது, கதவு பூட்டு உடைந்து கிடந்தது. வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய், பைக் திருடப்பட்டிருந்தது.
 இது தொடர்பாக கந்தேகவுண்டன்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் அதேபகுதியை சேர்ந்த 15 வயதான 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் திருடிய பைக்குடன் சுற்றிய போது போலீசாரிடம் பிடிபட்டார். விசாரணையில் அவர் நகை, பணம் திருடியது தெரியவந்தது.
போலீசார் மாணவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.  இதேபோல் அன்னூர் கஞ்சப்பள்ளியை சேர்ந்த தனியார் பள்ளி அலுவலரான ஜான்சன் என்பவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன் தினம் திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு 2 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை