கோவை, செப். 25: வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் வலியுறுத்துவதால் கோவை ஜீவா நகர் மக்கள் கோவை கலெக்டரிடம் நேற்று ஆதார்,ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜீவா நகர் உள்ளது. இங்கு அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 1979 முதல் 100 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1988ம் ஆண்டு குடிசைமாற்று வாரியத்துடன் குத்தகை மற்றும் நிலக்கிரய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, வீடு கட்டி வாரியத்திற்கு தவணை முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.