×

ரூ.1 கோடி மோசடி கணக்காளரிடம் விசாரணை

கோவை, செப்.25: கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி (31). இவர் துடியலூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். ரெடிமேடு துணிகள், மூலப்பொருட்களை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பும் பணிகளையும் இவர் கவனித்து வந்தார்.பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான 1.01 கோடி ரூபாயை இவர் நிறுவன கணக்கில் சேர்க்காமல் தனது வங்கி கணக்கு மற்றும் உறவினர் கணக்கில் சேர்த்து மோசடி செய்துள்ளார். நிறுவன கணக்கில் பணம் இல்லாமல் இருந்தது சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்தது.  இது தொடர்பாக பனியன் நிறுவன அதிகாரி சக்தி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் உதயநிதியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை