பவானி, செப். 25: பவானி, சித்தோட்டில் பூட்டியிருந்த வீடுகளின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பவானி அருகே உள்ள திப்பிசெட்டிபாளையம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (75). ஓய்வுபெற்ற காகித ஆலை பணியாளர். தனியே வசித்து வரும் இவர் தளவாய்பேட்டையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம் வீட்டுக்குள் சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 7 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து பாலசுப்ரமணியம் பவானி போலீசில் புகார் அளித்தார்.
சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் உமாசங்கர் (36). பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி