பூஜை நடத்தி தாய்,மகள் பலாத்காரம்

கோவை, செப்.25.  பூஜை நடத்துவதாக கூறி தாய், மகளை மந்திரவாதி பலாத்காரம் செய்ய காரணமாக இருந்த கணவன் மற்றும் கணவனின் தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் கோவை நகர போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.ேகாவை ரத்தினபுரியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் தனது 16 வயதான மூத்த மகள் மற்றும் 8 வயது கடைசி மகளுடன் வந்து நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.  

 இதுதொடர்பாக அந்த பெண் கூறியதாவது: எனக்கு 2000ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் தேவராஜ்பாளையத்தை சேர்ந்த மணி (60) என்பவருடன் திருமணம் நடந்தது. என் கணவர் வயதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். என் கணவர் பெயரில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர். மூத்த மகள் 11ம் வகுப்பும், கடைசி மகள் 3ம் வகுப்பும் படிக்கிறார்.

 கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என் கணவரும், அவரது தம்பி துரைசாமியும், குட்டி மணி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். பரிகார பூஜை நடத்தவேண்டும், அப்போது தான் சொத்து நிலைக்கும் என அந்த மந்திரவாதி கூறினார். எங்களது தோட்டத்திற்கு அருகேயுள்ள ஒரு ஓடையில் இரவு 7 மணிக்கு என்னை மட்டும் தனியாக பூஜைக்கு அழைத்து சென்றார்.

 விடிய விடிய குட்டி மணி  பூைஜ நடத்தினார். என் தலையில், வயிற்றில் ஏதோ மை போல் தடவினார். குட்டி சாத்தானை ஏவி விடுவதாக கூறிய அவர், என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். இந்த விஷயத்தை நான் என் கணவரிடம் கூறிய போது, மானம் போய் விடும் எனக்கூறி புகார் செய்ய தடை விதித்தார். என்னை ெதாடர்ந்து என் மூத்த மகளையும் ஒவ்வொரு அமாவாசை நாளில் பூஜைக்கு அழைத்து சென்றனர். குட்டிமணி என் மகளை தனியாக அழைத்து சென்று பூஜை செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தை என் மகள் என்னிடம் மறைத்து விட்டார். என் கணவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவர் என்னை கோவை ரத்தினபுரியில் உள்ள என் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார். என் அண்ணன்,தம்பி  ஆகியோரும் என் பெற்றோருடன் வசித்து வந்தனர். என் சகோதரர்கள் என்னிடம் இருந்த 6 பவுன் தங்க நகை, 1 லட்ச ரூபாயை வாங்கினார்கள். இப்போது, என்னை விரட்டி விட்டனர். என் குழந்தைகளுடன் நான் ஆதரவின்றி தவிக்கிறேன்.

மந்திரவாதியை அழைத்து வந்து என் வாழ்கையை நாசம் செய்த என் கணவர் அவர் தம்பி, என் பணம் நகையைஅபகரித்த சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories: