×

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

திருவெண்ணெய்நல்லூர், செப். 25: திருவெண்ணெய்நல்லூர் அருகே வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் மனைவி அஞ்சலை (31). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சண்முகம்(31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 22ம் தேதியன்று அஞ்சலை தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகம், குணசேகரன் (49), பன்னீர் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து அஞ்சலையை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.   இதில் காயம் அடைந்த அஞ்சலை திருக்கோவிலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை