போராட்டம் நடத்த முயன்ற 17 பேர் அதிரடி கைது

உளுந்தூர்பேட்டை, செப். 25:

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் அகில இந்திய விவசாயிகள் மகாசபை, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் திருநாவலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆற்று

மணல் மற்றும் கனிமவளங்கள் சட்ட விரோதமாக கொள்ளை போவதை தடுக்கவும், காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல்நிலையத்திற்கு லஞ்சம் கொடுக்கும் போராட்டம் நடத்த அறிவித்தனர். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட சென்ற வீரன், ஏழுமலை, பாபு, ராதாகிருஷ்ணன், ஆறுமுகம், கலியமூர்த்தி, கந்தசாமி உள்ளிட்ட 17 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Related Stories: