×

வியாபாரியை தாக்கிய வாலிபர் அதிரடி கைது

திண்டிவனம், செப். 25:  திண்டிவனம் நல்லியக்கோடன் நகரை சேர்ந்தவர் ராஜவேல் மகன் ரமேஷ் (49). இவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் டீ கடை மற்றும் பங்க் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடைக்கு வந்த திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த சேட்டு என்கின்ற சரவணன் (24) ரமேஷிடம் மாமுல் கேட்டுள்ளான். மாமூல் தர மறுக்கவே ஆத்திரமடைந்த சேட்டு கடையில் இருந்த பாட்டில்களை கீழே தூக்கிப் போட்டு உடைத்து ரமேசிற்குகொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ரமேஷ் திண்டிவனம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சேட்டு என்ற சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை