திண்டிவனம், செப். 25: திண்டிவனம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் திண்டிவனம் தனியார் மண்டபத்தில் நடந்தது. திண்டிவனம் சார் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பிரபு வெங்கடேஸ்வரன், பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, தீயணைப்பு அலுவலர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சார் ஆட்சியர் மெர்சி ரம்யா மற்றும் பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குநர் வாசுதேவன் ஆகியோர்