தனித்தனி சம்பவத்தில் 2 பெண் மீது தாக்குதல்

உளுந்தூர்பேட்டை, செப். 25:  உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மனைவி பொன்னம்மாள்(30). இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் ஆறுமுகம்(55) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த பொன்னம்மாளை அங்கு சென்ற ஆறுமுகம் மற்றும் இவருடன் சென்ற சந்தோஷ்குமார், கோமளவள்ளி ஆகிய 3 பேரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் பொன்னம்மாள் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரணி

நாதன் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து அதில் ஆறுமுகத்தை கைது செய்தனர். மற்றொரு சம்பவம்: உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி மங்கலட்சுமி. இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் ஆறுமுகம்(37) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மங்கலட்சுமியை, ஆறுமுகம் மற்றும் அவருடன் சென்ற பூங்காவனம் ஆகிய 2 பேரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் மங்கலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிந்து அதில் ஆறுமுகத்தை(37) கைது செய்தனர்.

Related Stories: