அரியலூர் மாணவர் விடுதிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ரிஷிவந்தியம், செப். 25:    ரிஷிவந்தியம் அடுத்து அரியலூர் அரசு மாணவர் விடுதி உள்ளது. இந்த மாணவர் விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியை சுற்றி  விளை நிலங்களில் கரும்பு, நெல் பயிர் செய்து வருகின்றனர். இங்கு விடுதி கட்டிடத்தை சுற்றி சுற்றுப்புற சுவர் பாழடைந்து 6 மாதத்திற்கு மேல் ஆகியும் புதிதாக சுற்றுப்புற சுவர் அமைக்காமல் உள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி விடுதியினுள் நுழைந்து மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. எனவே மாணவர்களின் அச்சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக விடுதிக்கு சுற்றுப்புற சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: