×

செங்குறிச்சி- பாதூர் வழித்தடத்தில் தார் சாலை அமைக்கும் பணி

உளுந்தூர்பேட்டை, செப். 25:  உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி கிராமத்தில் இருந்து பாதூர் கிராமம் வரையில் தார் சாலை போடும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் அதிநவீன இயந்திரங்கள் கொண்டு சாலை போடும் பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் இந்த சாலை போடும் பணியினால் செங்குறிச்சி கிராமத்தில் இருந்து பாதூர் கிராமம் வரையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் ஒருவழிப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. திடீரென எதிர், எதிர் திசையில் வாகனங்கள் வந்ததால் வாகனத்தை வாகன ஓட்டுனர்கள் மெதுவாக ஓட்டிச் சென்றனர். விபத்து சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் தடுப்பு பலகைகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை