×

ஆட்டோ டிரைவருக்கு சரமாரி கத்திக்குத்து

பாகூர், செப். 25: பாகூர் அருகே ஆட்டோ டிரைவரை சரமாரியாக கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் பிரகாஷ் (28). இவர் சாவடி- சோரியாங்குப்பம் இடையே ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி சோரியாங்குப்பத்தை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவர் பிரகாஷின் ஆட்டோவை மடக்கி, வாடகைக்கு ஆட்டோ கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், அவரது நண்பர் மணிபாலன் ஆகியோர் சேர்ந்து பிரகாஷை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் கடலூர் அரசு மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது அண்ணன் வெங்கடேசன் பாகூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷ், மணிபாலன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...