முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை

புதுச்சேரி, செப். 25: புதுச்சேரி முப்படை நலத்துறை இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களின் வாரிசுகள் 2017-18ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சரிபார்த்து தகுதியானவர்களுக்கான கல்வி உதவித்தொகை அக்.4ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் இதுபற்றிய விவரங்களை அறிய புதுச்சேரி முப்படை நலத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாகே, ஏனாம் மண்டல நிர்வாக அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: