மொபட் விபத்தில் பெண் பலி

நாசரேத், செப். 25: நாசரேத் அருகேயுள்ள கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை ( 60). உப்பு வியாபாரி. இவரது மனைவி சாந்தா (55). இவர், தனது மகன் சரவணனுடன் (29) நேற்று முன்தினம் மாலை அருகே கடையநோடையில் உள்ள வாய்க்காலில் குளித்து விட்டு மொபட்டில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். மொபட்டை சரவணன் ஓட்டினார். நாசரேத் அடுத்த வளவன்நகர் பகுதியில் வந்தபோது மொபட்டில் இருந்து தவறிவிழுந்த சாந்தா படுகாயமடைந்தார். இதையடுத்து மீட்கப்பட்ட அவர் நாசரேத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

Related Stories: