திருச்செந்தூர், செப். 25: ஆலந்தலை புனித வின்சென்ட் தே பவுல் சபையின் கிளை சபையான புனித பேதுரு பவுல் சபையின் வெள்ளி விழா நடந்தது. இதையொட்டி பேதுரு பவுல் ஆலயத்தில் மணப்பாடு பங்குத்தந்தை தியோபிலஸ் தலைமையில் சிறப்பு நிகழ்வுகள் நடந்தன. ஆலந்தலை பங்குத்தந்தை ஜெயக்குமார், ரோஷன் மற்றும் அனைத்து சபையினர், ஊர்நல கமிட்டியினர், நிதிகுழுவினர்கள், ஊர் மக்கள் என திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து திரு இருதய மக்கள் மன்றத்தில் நடந்த விழாவில் 25 ஏழை சுவிகார குடும்பங்களுக்கு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் வட்டார சபைத் தலைவர் சத்தியன், மத்திய சபை துணைத் தலைவர் அன்றன்ரூபன், சோபியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்ட சேசுராஜாவுக்கு அனைத்து சபையினர் பாராட்டு தெரிவித்தனர். ஏற்பாடுகளை சபை தலைவர் தஸ்நேவிஸ் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.