கார் மோதி முதியவர் பலி

ஸ்பிக்நகர், செப்.25: தூத்துக்குடி ஸ்பிக்நகர் அடுத்த முத்தையாபுரம்  வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (60). இவர் அருகேயுள்ள கோயில் திருவிழாவில் பங்கேற்க தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார்.    அப்போது அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார், இவரது சைக்கிள்மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு பலத்தகாயமடைந்த கருப்பசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.     விபத்து குறித்து கருப்பசாமியின் மகன் முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: