தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி மனைவி சுசீலா (70). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டருகே ஸ்டேட் பாங்க் காலனி ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து நடந்து வந்த வாலிபர் ஒருவர், சுசீலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றார். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த எஸ்ஐ ராஜாமணி தலைமையிலான வடபாகம் போலீசார், நகை பறித்துச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.