நாசரேத், செப். 25: நாசரேத் அருகே மூக்குப்பீறியில் தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜான் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் முத்து கண்ணம்மாள் கொடியசைத்து பேரணியைத் துவக்கிவைத்தார். என்எஸ்எஸ் மாணவர்கள் பிரகாசபுரம், மூக்குப்பீறி, ஓய்யான்குடி போன்ற கிராமங்களுக்கு பேரணியாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கினர். இதில் ஆசிரியர்கள் காரட் காபிரியேல், அமிர்தராஜ், ஆசிரியைகள் கிரேசியா, ஜெபமரியஸ்டெல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.