குண்டும் குழியுமாக மாறிய கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலை

கடையநல்லூர், செப்.25:  கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சந்திப்பு சாலையாகவும் உள்ளது. சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. எனவே, குண்டும் குழியுமாக மாறிய கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க அத்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்ப பகுதி பொது கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: