பாவூர்சத்திரத்தில் பஸ்சில் பெண்ணிடம் பணம், செல்போன் திருட்டு

பாவூர்சத்திரம், செப்.25:  பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம், செல்போன் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தென்காசி அருகேயுள்ள கடப்போக்கத்தியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி சண்முகத்தாய். இவர் நேற்று கடப்போக்கத்திலிருந்து மினி பஸ்சில் பாவூர்சத்திரம் வந்து அங்கிருந்து சுரண்டைக்கு செல்ல டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது அவரது மணிபர்சில் இருந்த ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் மொபைல் போனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: