புளியங்குடி, செப்.25: சொக்கம்பட்டி வளையர்குடியிருப்பைச் சேர்ந்த முருகையா மகள் சித்ரா (20). இவர் கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சித்ராவின் தாய் ராக்கம்மாள் சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழக்கு பதிவு செய்து சித்ராவை தேடி வருகிறார்.