சுரண்டை அருகே கார் விபத்தில் காற்றாலை மேலாளர் பரிதாப பலி

சுரண்டை, செப்.25:  சுரண்டை அருகே கார் விபத்தில் காற்றாலை மேலாளர் பரிதாபமாக பலியானார்.ஆலங்குளம் அருகே உள்ள மாய மான்குறிச்சியை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் கன்னியப்பன் (37). இவர் தனியார் காற்றாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீராணம் பகுதியில் பணியை முடிந்து விட்டு காரில் சொந்த ஊரான மாயமான்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். வீராணம் அதிசயபுரம் அருகில் வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கன்னியப்பன் பலியானார். தகவல் அறிந்து வந்த வீ.கே.புதூர் எஸ்.ஐ.சத்ய வேந்தன், உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். விபத்தில் பலியான கன்னியப்பனுக்கு தேவி(32) என்ற மனைவியும், பத்மா(7) என்ற மகளும்,அர்ஜுன்(5)என்ற மகனும் உள்ளனர்.

Related Stories: