சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

சிவகிரி, செப்.25: கருத்து சுதந்திரத்தை முடக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்தி கலையரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 2வது வார்டு கிளைச்செயலாளர் ரவீந்திரநாத் பாரதி தலைமை வகித்தார். 1வது வார்டு கிளைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், 3வது வார்டு கிளைச்செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரத்தை முடக்கி சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட குழு உறுப்பினர் பி.நடராஜன், ஒன்றிய செயலாளர் ஆர்.நடராஜன், ராமசுப்பு, மார்க்ஸ் மாரியப்பன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Stories: