கோவிந்தப்பேரி மேட்டு சுடலை ஆண்டவர் கோயில் கொடைவிழா

வீரவநல்லூர், செப்.25:  சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் அமைந்துள்ள பழமையான மேட்டு சுடலை ஆண்டவர் கோயில் 231வது ஆண்டு கொடை விழா 3 நாட்கள் நடந்தது.விழாவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுக அமைப்புச் செயலர் மற்றும் முன்னாள் எம்பி., பி.எச்.பி.மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் இருவருக்கும் பூரண கும்ப மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் வில்லிசை, சாஸ்தாபிறப்பு, சுவாமி மஞ்சள் நீராடுதல், மதியக்கொடை, அன்னதானம், சாமக்கொடை, சுவாமி மயானம் செல்லுதல், வாணவேடிக்கை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: