×

அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை கூட்டம்

ஈரோடு,  செப். 21: ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பூத்  கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த  கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி  எம்.எல்.ஏ.வுமான தென்னரசு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக  ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமலிங்கம்  கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சென்னையில் வரும் 30ம்தேதி  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில்  கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட  வாகனங்களில் கட்சியினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்வது, பாராளுமன்ற  தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 16 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, ஈரோடு  வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் வரும் 25ம்தேதி நடைபெறவுள்ள கண்டன  பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 நிகழ்ச்சியில்  ஈரோடு எம்.பி.செல்வக்குமார சின்னையன், மொடக்குறிச்சி  எம்.எல்.ஏ.,சிவசுப்பிரமணி, மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம்,  முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார்நகர் மனோகரன்,  ஜெகதீசன், ஜெயராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி, எம்.கே.ராஜா,  காவேரி செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்