×

பெண்களிடம் செயின் பறித்த இருவர் கைது

சத்தியமங்கலம், செப்.21: திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா(30). இவர் நேற்றுமுன்தினம் மாலை பவானிசாகர் அருகே நால்ரோடு பகுதியில் விளாமுண்டி வனப்பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்,  அப்போது அந்த வழியே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் நிர்மலாவின் அருகே சென்று கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த முன்றே கால் பவுன் தாலி செயின் மற்றும் அரை பவுன் தோடு ஆகியவற்றை பறித்தனர். அப்போது நால்ரோடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து பவானிசாகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  விசாரணையில் பைக்கில் வந்து நகையை பறிக்க முயன்றவர்கள் திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த கவுதம்(27), பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்(24) என்பது தெரிய வந்தது. இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு