ஆட்டோ டிரைவர் தற்கொலை

கோவை, செப். 21: கோவை கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்தவர் காதர். இவரது மகன் முகமது ரபீக்(38). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது மைத்துனர் அபுதாகீரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு முகமது ரபீக் பேசியுள்ளார். அப்போது, அவர் நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என கூறி விட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். பின்னர், நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஆர்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்.

Related Stories: