கோவை, செப்.21: கோவை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடந்தது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமார், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணி முடிவில், சத்துணவு கூடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.