கள்ளக்காதல் கொலை வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள்

கோவை, செப். 21: நெல்லை மாவட்டம் ராதாபுரம் இளஞ்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வன்னியராஜ்(34). அதே பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி(37), ராமசந்திரன் (22). இவர்கள், அண்ணன், தம்பி. இவர்கள் மூன்றும் பேரும் கோவை க.க.சாவடி அருகேயுள்ள மாவுத்தம்பதி என்ற இடத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனர்.  இவர்கள் அடிக்கடி ராதாபுரம் சென்று வந்துள்ளனர். அப்போது, வன்னியராஜ்க்கும், தங்கமணியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தங்கமணிக்கு தெரியவந்தது. பின்னர், தங்கமணி, ராமசந்திரன் இருவரும் வன்னியராஜை எச்சரித்தனர். இந்நிலையில், கடந்த 4.3.2013 அன்று க.க.சாவடியில் வீட்டில் இருந்த போது மூன்று பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தங்கமணி, ராமசந்திரன் ஆகியோர் இணைந்து வன்னியராஜின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர், வன்னியராஜை தூக்கில் மாட்டி, தற்கொலை செய்ததது போல் வைத்தனர்.

இது தொடர்பாக க.க.சாவடி போலீசார் விசாரணை நடத்தி தங்கமணி, ராமசந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 4வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தேவி, தங்கமணி, ராமசந்திரன் இருவருக்கும் ஆயுள் தண்டணை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதில், அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார்.

Related Stories: