போக்குவரத்து விதி மீறிய வாகன உரிமையாளர்களுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்

கோத்தகிரி,செப்.21: கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தலைமையில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த 3 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 5 வாகன உரிமையாளர்களுக்கு ரூ.1000 மற்றும் இது போல் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: