குப்பைகளை அகற்ற கோரிக்கை

கோத்தகிரி,செப்.21: கோத்தகிரி அருகிலுள்ள கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பில்லிக்கம்பை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் குப்பைகளை குவித்திருப்பதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பில்லிக்கம்பை கடைவீதி, மேல்ஹட்டி, கீழ் ஹட்டி பகுதிகளில் உள்ள குப்பைகளை மொத்தமாக கொண்டு வந்து பேருந்து நிறுத்தம் அருகில் குவித்து வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பேருந்துக்காக காத்து நிற்பவர்கள் நோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். எனவே கக்குச்சி ஊராட்சி நிர்வாகம் நீண்ட நாட்களாக குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: