மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பவானி, செப்.21:   ஈரோடு மாமரத்துபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேல் மாடியில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராமல் 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த கார்த்திகேயன் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: