அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

திருப்பூர், செப்.21: திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், அப்பகுதி இருளில் மூழ்கியது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்திருப்பூரில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில், தொடர்ந்து பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த திடீர் மின்தடையால் தூங்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும் நிலையில், அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்தடையால் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Related Stories: