திருப்பூர்,செப்.21:திருப்பூர், ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் கிலோ கணக்கில் ரேஷன் அரிசி வாங்கி அவற்றை மூட்டையாக கட்டி பைக்கில் எடுத்து சென்ற வாலிபர் ஒருவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே,அப்பகுதி மக்கள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதிகாரிகள் வந்து விசாரித்த போது, அரிசி கடத்தியவர் திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (26) என்பதும் பனியன் தொழிலாளியான இவர் பொது மக்களிடம் ஒரு கிலோ ரேஷன் அரிசியை ரூ.3க்கு வாங்கி, கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள வடமாநில இளைஞர்களுக்கு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து அவரிடமிருந்து நான்கு அரிசி மூட்டை அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.