சங்ககிரி, செப்.21: சங்ககிரி மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கிருத்திகா(17), திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி இரவு, வீட்டில் இருந்த கிருத்திகா திடீரென மாயமானர். காலையில் குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால் தாயார் சுகுணா, சங்ககிரி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை பக்கத்து வீட்டை சேர்ந்த ஈஸ்வரி மகன் சதீஷ், அவரது பாட்டி தமிழரசி ஆகியோர் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் எஸ்ஐ ஹரிஹரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.