மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்ேகற்க அழைப்பு

சேலம், செப்.21:  மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 6ம் தேதி சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது.  இது குறித்து சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  சேலம் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டிற்கான, மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 6ம் தேதி காலை 8 மணிக்கு சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. மாவட்ட அளவிலான போட்டியில் இருபாலம் கலந்து கொள்ளலாம். இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை) முதுநிலைப் பிரிவு (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் இடங்களை பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளஅனுப்பி வைக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பெயரை இணையத்தளம் மூலமாக மட்டுமே பதிவு செய்ய இயலும். போட்டிகளில் கலந்துகொள்ள தங்கள் பெயரை sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பள்ளி தகுதிசான்றிதழ் ஆகியவற்றை பதியேற்றம் செய்து கலந்துகொள்ளலாம். இணையதளத்தில் பதிவு செய்யாதவர்கள் போட்டியில் நேரடியாக கலந்துகொள்ள இயலாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: