×

முறையாக குடிநீர் வழங்ககோரி கோட்டாத்தூரில் சாலை மறியல் - பொதுமக்கள் போராட்டம்

துறையூர், செப்.21: கோட்டாத்தூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது கோட்டாத்தூர். முசிறி ஒன்றியத்தில்  உள்ள இந்த ஊராட்சியில் கடந்த இரு மாதங்களாக ஊரின் தென்புறம் தினசரி பலமணிநேரம் தண்ணீர் வீணாகும் வகையில் விநியோகம் செய்யப்படுவதாகவும், ஊரின் மற்றொரு பகுதியான வடபுரத்திற்கு முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும் டேங்ங் ஆபரேட்டர்கள் மோட்டார் போட்டவுடன் தங்களுக்கு வேண்டிவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போன்செய்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்துக்கொள்ள தகவல்அளிப்பதை கண்டித்தும், முசிறி ஒன்றியத்தில் கடைகோடியில் கோட்டாத்தூர் ஊராட்சி உள்ளதால் தங்கள் கிராமத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் துறையூர்- ஓமாந்தூர் சாலையில் கோட்டாத்தூர் பஸ்நிலையத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லமுடியாமல் 2மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணிதாஸ், துறையூர் சப்இன்ஸ்பெக்டர் செல்லப்பன் மற்றும் வருவாய்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.



Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை