லாரி மோதி 18 ஆடுகள் பலி:

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் சொந்தமாக 200 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். தனது ஆடுகளை கடந்த சில வாரங்களாக சிறுகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் பட்டி போட்டு வந்தார்.இந்நிலையில் நேற்று தனது ஆடுகளை சிறுகளப்பூர் - நம்புகுறிச்சி ரோட்டில் பெருவளப்பூர் நோக்கி ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி திடீரென ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் 18 ஆடுகள் உடல் நசுங்கி இறந்தன. 25 ஆடுகள் காயமடைந்தன. இதுகுறித்து மருதுபாண்டி சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: