ஓடும் பஸ்சில் பயணியிடம் பர்ஸ் திருடிய 2 பெண்கள் கைது

திருச்சி, செப்.21: திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் குமுதம் தெருவை  சேர்ந்தவர் பழனிசாமி (56). திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து  கே.கே.நகருக்கு பஸ்சில் சென்றார். பஸ் காஜாமலை பஸ் நிறுத்தம் அருகே  சென்றபோது பஸ்சில் வந்த 2 பெண்கள், பழனிசாமி பேண்ட் பாக்கெட்டில்  வைத்திருந்த மணிபர்சை  திருடிக்கொண்டு கீழே இறங்க முயன்றனர்.இதை பார்த்த பழனிசாமி,  சக பயணிகளுடன் சேர்ந்து 2 பெண்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கே.கே.நகர்  போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜீவா (50), முத்து மனைவி சுபிதா (37)  என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும்  கைது செய்தனர்.

Related Stories: