திருச்சி, செப்.21: திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் குமுதம் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (56). திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு பஸ்சில் சென்றார். பஸ் காஜாமலை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சில் வந்த 2 பெண்கள், பழனிசாமி பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சை திருடிக்கொண்டு கீழே இறங்க முயன்றனர்.இதை பார்த்த பழனிசாமி, சக பயணிகளுடன் சேர்ந்து 2 பெண்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கே.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜீவா (50), முத்து மனைவி சுபிதா (37) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.