×

நாட்டரசன்கோட்டை ெபருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் இன்று தேரோட்டம்

சிவகங்கை, செப். 21: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடக்க உள்ளது. சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மமோற்சவ திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு செப்.13ல் கொடியேற்றுதல், காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று எட்டாம் திருவிழாவையொட்டி குதிரைவாகனத்தில் பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (செப்.21) ஒன்பதாம் திருவிழாவையொட்டி காலை 9மணி முதல் 10மணிக்குள் தேரோட்டம் நடக்க உள்ளது. நாளை 10ம் திருநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் நாராயணன், மேலாளர் இளங்கோ மற்றும் நகரத்தார், விழாக்குழுவினர் செய்தனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்