×

போக்குவரத்திற்கு இடையூறு தூய்மை பள்ளி திட்டம்

தொண்டி, செப். 21: தொண்டி அருகே உள்ள நம்புதாளை மற்றும் தாமோதரன்பட்டினம் அரசு பள்ளிகளில் தூய்மை பள்ளி திட்டத்தின் கீழ் கழிப்பறை தூய்மை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூய்மை பாரதம் தூய்மையான பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை தூய்மை மற்றும் தனி மனித தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏறப்படுத்தும் விதமாக மாணவர்கள் பேரணி நடைபெற்றது. நம்புதாளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பயிற்றுனர் பேகம் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செய்யது யூசுப் முன்னிலையில் தலைமை ஆசிரியர் ஜன்தாமஸ் பேரணியை துவக்கி வைத்தார். தூய்மை குறித்து மாணவர்கள் பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பி சென்றனர். தாமோதரன்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துச்சாமி தலைமையில் உதவி ஆசிரியை சிவசங்கி முன்னிலையில் பள்ளி வளாகம், கழிப்பறை உள்ளிட்டவை சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வீடாக பேரணியாக சென்று சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மேலாண்மை குழு தலைவி தொண்டீஸ்வரி, தீபம், மீனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை